deepamnews
இலங்கை

கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்.

8 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (17.11.2023) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இத்திட்டம் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரமும், திறைசேரியின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுக்காக வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

எரிபொருள் சந்தையில் மேலும் ஒரு நிறுவனம் பிரவேசம் – ஒப்பந்தம் கைச்சாத்தானது

videodeepam

பொருளாதார மீட்சிக்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை செயற்படுத்த வேண்டும் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

videodeepam

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு

videodeepam