deepamnews
இலங்கை

இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை!

குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலனறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் நேற்று   இடம்பெற்றுள்ளது.

இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆர்.சமரக்கோன் (வயது 42) என்பவரே வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழுவே குறித்த குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

22வது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று

videodeepam

பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது!

videodeepam

யாழில் போராட்டம் நடத்திய போது கைதான நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேருக்கும் பிணை

videodeepam