deepamnews
இலங்கை

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு,வழிமறித்து வால் வெட்டு!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் அமைந்துள்ள வீடுடேண்றில் உறவினர்களுக்கு இடையே நேற்றைய தினம் 26.09.2023பகல்வேளை வாய்த்தக்கம் இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு இனம் தெரியாதவர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கேற்று மற்றும் மோட்டார் சைக்கிள், வீட்டின் கதவு, மின் விழக்கு, பூச்சாடிகள் என்பனவற்றை இனம் தெரியாதவர்கள் கொத்தி நாசமாக்கப்பட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் களவாடி சென்று உள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று கிளிநொச்சி 27.09.2023 போலீஸ் நிலையத்திற்குமுறைப்பாடு அளித்துவிட்டு திரும்பி வரும் வழியில் வீட்டு உரிமையாளர் மீதும் வாழ்வேட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து திருவையாறு பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகின்றது அதானி குழுமம்?

videodeepam

மாபெரும் நெடுந்தீவு மக்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

videodeepam

தேவையேற்படின் போராட்டங்களை மேற்கொள்வதில் தவறில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

videodeepam