deepamnews
இலங்கை

கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மீட்பு!

கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக ஏ 9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் 27.11.2023 அன்று களவாடப்பட்டது. குறித்த மோட்டார் சைக்கிலின் உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்து அதன்சொக்கச்சோர் ஒன்றை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் உதிரி பாகங்களை விற்பனையில் ஈடுபட்டவர் மீது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது .

எனவே குறித்த நபரை 14.12.2023 அன்று கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டு அவற்றை தனித்தனியாக உதிரி பாகங்களை பிரித்து விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளது என சந்தேகத்தில் செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுடன் சந்தேக நபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது முக்கியமானது – விக்டோரியா நுலண்ட் தெரிவிப்பு

videodeepam

மேல் மாகாண அபிவிருத்திக்கு முன்னுரிமை –  ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

videodeepam

பெண்களுடன் தகாத உறவு: சர்ச்சைக்குரிய பிக்கு கைது.

videodeepam