deepamnews
இலங்கை

அடுத்த தேர்தலின் ஊடாக மீண்டும் அதிகாரம் கிடைக்கும் – மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை.

அடுத்த தேர்தலின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தமது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதோ தமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிந்திவெல பகுதியில் ஆரம்பமாக கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

” கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த விடயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன.

போதைப்பொருளால் நாடு அழிந்து வரும் நிலையில், அதனை ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம்.

எதிர்வரும் தேர்தலின் ஊடாக நாம் மீண்டும் ஆட்சி வருவோம். எமது ஆட்சியில் வரிகளை நீக்குவதற்கு மாறாக மக்களுக்கு நியாயமான வரிகள் முறைமைகள் அறிமுகப்படுத்தப்படும்.” – என்றார்.

Related posts

பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது!

videodeepam

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

videodeepam

மரக்கறி விலை வீழ்ச்சி – வியாபாரிகள் கவலை தெரிவிப்பு

videodeepam