deepamnews
இலங்கை

ஆலயமொன்றில் தேவாரம் பாடிய நபர் மயங்கி வீழ்ந்து சாவு.

யாழ்ப்பாணம், வடமராட்சி, வல்வெட்டித்துறையில் ஆலயமொன்றில் தேவாரம் பாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கிச் சரிந்த நபர் உயிரிழந்தார்.

வல்வெட்டித்துறைச் சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே உயிரிழந்தார்.

தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்துக்குத் தினமும் சென்று தேவாரம் ஓதி வரும் நிலையில் நேற்றுமுன்தினம் வழமை போன்று ஆலயத்துக்குச் சென்று தேவாரம் ஓதிக்கொண்டிருந்த வேளை மயங்கி வீழ்ந்தார்.

அதையடுத்து அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

Related posts

மிளகாய் தூளில் 50 சதவீத கலப்படம்

videodeepam

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு!

videodeepam

யாழ். மாவட்டத்தில் பாண்னின் விலை குறைப்பு!

videodeepam