deepamnews
இந்தியா

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால கலைப் பொருட்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பழங்கால கலைப் பொருட்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்திடம் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் கலைப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தரன்ஜித் சிங் தெரிவித்தார்.

அப்பொருட்கள் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Related posts

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் – பா.ஜ.க முக்கியஸ்தர்கள் வலியுறுத்தல்

videodeepam

ஒடிசா தொடருந்து விபத்து -ஐ.நா செயலாளர் நாயகம் கவலை தெரிவிப்பு

videodeepam

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தையில் இணைய தயார்: பிரதமர் மோடி தெரிவிப்பு

videodeepam