deepamnews
இந்தியா

பீகார் மாநிலத்தின் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்பு .

பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராம பகுதியில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 4 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள தோட்டத்தில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இதனை அவதானித்த, குழந்தையின் தாய் உடனடியாக காவல்துறைக்கு அறிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், 60 அடி ஆழத்தில் இருந்த குழந்தையை 9 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், பாதுகாப்பாக உயிருடன் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து மீட்புக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related posts

அரசின் அனைத்துத் துறைகளையும்  ஆர்.எஸ்.எஸ். தான் நடத்துகிறது!  – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

videodeepam

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி உயிரிழப்பு – இந்தியாவின் கேரளாவில் சம்பவம்

videodeepam

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை தடுக்க முன்னுரிமை – இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிப்பு 

videodeepam