deepamnews
இலங்கை

கிளிநொச்சி – முகமாலையில் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

கடந்த ஆவணி மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் (03) பிற்பகல் 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த யதீஸ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரு சந்தேகபர்கள் நேற்றையதினம் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமாலை பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது ஒரு கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை புரட்டாதி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts

சீனாவின் கடன் ரத்து போதுமானதல்ல என்று நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை – ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவிப்பு

videodeepam

பளை இத்தாவில் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

videodeepam

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் வழிகாட்டலிலிருந்து சிலர் விலக்கொண்டதே முஸ்லிம்களின் சோதனைக்கான காரணம் : ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான்.

videodeepam