deepamnews
இலங்கை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தவர் கைது.

தரமற்ற ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தார் என கூறப்படும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவர் கொள்ளுபிட்டியில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மனித இரத்தத்தில் தயாரிக்கப்படும் உரிய தரத்தைக் கொண்டிராத ஹியூமன் இம்யூனோ குளோபியுலின் மருந்து 22 ஆயிரத்து 500 குப்பிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என அண்மையில் வெளிக்கொணரப்பட்டிருந்தது.

Related posts

கிணற்றில் யுவதியின் சடலம்.

videodeepam

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

videodeepam

அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அரச பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்

videodeepam