இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை தென்னாபிரிக்கா சுமத்தியுள்ளது.
இஸ்ரேல் இனப்படுகொலை குற்றத்தை செய்து வருவதாக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
காஸாவில் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக அக்குற்றச்சாட்டில் தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் பல போர் குற்றங்களைச் செய்வதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில், தென்னாபிரிக்கா இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.
பொதுமக்களை பாதுகாக்குமாறு பல நாடுகளும் வலியுறுத்திய போதும், காஸாவில் இதுவரை 21 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொன்றிருப்பது குறிப்பிடத்தக்கது.