deepamnews
இலங்கை

திருகோணமலையில் சுற்றுலா சென்ற எட்டுப் பேர் வாகன விபத்தில் படுகாயம்.

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூதூர் தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவமானது நேற்று (26.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சிக்கியவர்கள் அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வானில் சுற்றுலா வந்தவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுற்றுலாவை முடித்துக் கொண்டு அவிசாவளை நோக்கி வானில் திரும்பிச் சென்று வேளை, திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தின் பின்னால் அவர்கள் பயணித்த வான் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.

இதன்போது வானில் பயணித்த வான் சாரதி உற்பட 07 பேர் படுகாயந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வாகனத்தின் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

யாழில் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு.

videodeepam

இலங்கையின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பிரித்தானியா உதவி

videodeepam

அரசாங்கத்தின் மற்றுமொரு மோசடிக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

videodeepam