deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் திடீரென வந்த புத்தர் சிலை!

யாழ்ப்பாணம் –அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இனங்காணப்பட்டிருந்தது.

அந்தப் பகுதியில் நின்ற இராணுவத்தினரே அதனை அமைத்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பிரசன்னமாகி இருந்தனர்.

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில் நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த சிலை வைத்திருந்தது பரபரப்பை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நிதி அமைச்சுக்கு கடிதம்

videodeepam

பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசிய கட்சி சந்திப்பு – உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அவதானம்  

videodeepam

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது என்கிறது பொதுஜன பெரமுன

videodeepam