deepamnews
இலங்கை

உரம், கிருமிநாசினிகளை பகிர்ந்தளிக்க கியூ.ஆர். குறியீட்டு முறைமை விரைவில் அறிமுகம்

உரம் மற்றும் கிருமிநாசினிகளை பகிர்ந்தளிப்பதற்காக கியூ.ஆர். குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

உர விநியோகத்திற்காக கடந்த முறை 6.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வீழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மீண்டெழுவதற்கான காலமாக இந்த பருவம் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் வழமை நிலையை அடையும் வரை, அவர்களுக்குத் தேவையான நிதி ரீதியான உதவிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை

videodeepam

டிசம்பர் 15 வரை மின்வெட்டு தொடரும் – சுற்றுலா வலயங்களில் இரவு வேளையில் மின்வெட்டு இல்லை

videodeepam

மின் துண்டிப்பு மீண்டும் ஏற்படும் அபாயம்: செயலிழக்கும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம்

videodeepam