deepamnews
இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறையும்..! – ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

கடனை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் குறைய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஹங்வெல்லவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில்,

சரக்கு இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்காலிகமான நிலை ஆகும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்படுமானால் அது ஜனநாயக விரோத நடவடிக்கையாக அமையும்.

எக்காரணம் கொண்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால், அவ்வாறானதொரு நிகழ்வுக்கு எமது கட்சி தயாராக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விடுவிக்கப்பட உள்ள காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ளலாம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

videodeepam

கைதிக்கு கைப்பேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

videodeepam

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

videodeepam