deepamnews
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம்!

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

யாழ் வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களோடு கலந்துரையாடினார்.

சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.

இதன்போது, இன்று காலையில் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கு அவர் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தார்.

வைத்தியசாலையின் அருங்காட்சியத்தை பார்வையிட்ட மைத்திரிபால சிறிசேன, யாழ் மாவட்ட மருத்துவ துறையின் வரலாறு தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

Related posts

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் – 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்

videodeepam

மொட்டுவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என்கிறார் மஹிந்த.

videodeepam

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு

videodeepam