deepamnews
இலங்கை

இலங்கையர்கள் உள்ளிட்ட 27 சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது

ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட 27  சட்டவிரோத குடியேற்றவாசிகள் ரோமானிய எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், எரித்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடைகள், இரும்பு போன்றவற்றை ஏற்றிச்சென்ற இரண்டு ட்ரக் வண்டிகளை சோதனையிட்டபோது, அவர்கள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 21 முதல் 67 வயதிற்கு உட்பட்டவர்கள் அடங்குகின்றனர். 

Related posts

அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நலத்திட்ட உதவிகள்  எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும்

videodeepam

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி முதலாம் வருட ஆசிரிய மாணவன் திடீர் மரணம்

videodeepam

இலங்கைக்கு எதிரான ஐ.நா.இன் புதிய தீர்மானம் IMFஇன் செயற்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 

videodeepam