இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
எல்லகாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும், ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2024/03/drowning-1024x384.jpg)
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிரியெல்ல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.