deepamnews
இலங்கை

இராணுவச் சிப்பாயும், இளம் யுவதியும் களு கங்கையில் மூழ்கி பரிதாபச் சாவு!

இரத்தினபுரி – கிரியெல்ல, எல்லகாவ பிரதேசத்தில் களு கங்கையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

எல்லகாவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய யுவதியும், ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இராணுவச் சிப்பாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிரியெல்ல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளில் மாற்றம் – அடுத்த வாரம் அறிவிப்பு

videodeepam

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தாமதமடைந்த நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ளது.

videodeepam

பாணந்துறையில் பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

videodeepam