யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் மக்களின் காணிகள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டுள்ளது.
ஜே- 244 வயாவிளான் கிழக்கு, ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு, ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது
இந் நிகழ்வு அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்றது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2024/03/17110988961-1024x576.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2024/03/17110988962-1024x576.jpg)
![](https://deepamnews.lk/wp-content/uploads/2024/03/17110988964-1024x768.jpg)
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள், இராணுவத்தினர், காணி உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.