deepamnews
இலங்கை

கண் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!

கண் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறைச் சேர்ந்த இராசமணி முருகேசு (வயது- 70) என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை முற்பகல் கண்ணில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா நேற்று (03) விசாரணைகளை மேற்கொண்டார்.

Related posts

உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் பலி!

videodeepam

அடுத்த தேர்தலின் ஊடாக மீண்டும் அதிகாரம் கிடைக்கும் – மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை.

videodeepam

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் 35 ஆவது நினைவேந்தல்

videodeepam