deepamnews
இலங்கை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு உயர்பீடம் தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக நாட்டிற்கு தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, அவரது உறுப்புரிமையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

Related posts

கட்டில் தடுப்பில் சிக்கி 7 மாதக் குழந்தை உயிரிழப்பு.

videodeepam

மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு இடையில் சந்திப்பு

videodeepam

சிறிய குற்றங்களுக்கு ஆளாகுபவர்களை வீட்டுக்காவலில் வைக்கும்  வகையில் சட்டம் அமைக்க நடவடிக்கை – நீதி அமைச்சர் திட்டம்

videodeepam