deepamnews
இலங்கை

காரைநகரில் கடற்படை வேட்டை – 137 கிலோ கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்கள் கைது!

யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின்போது இன்று அதிகாலை 137 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காரைநகர் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றைக் கடற்படையினர் சோதனை செய்தபோது படகின் உள்ளே ஒரு மூடைக் கஞ்சாவும், கடலில் வீசப்பட்ட நிலையில் மேலும் இரு மூடைகளில் கஞ்சாவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூன்று மூடைகளில் இருந்தும் மொத்தமாக 137 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கஞ்சா கடத்திய படகில் இருந்த கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை – சீரற்ற காலநிலையால் யாழில் 221 குடும்பங்கள் பாதிப்பு

videodeepam

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும் – அரசாங்கம் உறுதி

videodeepam

ஆவரங்கால் பகுதியில் இன்று அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கண்டர் ரக வாகனம் விபத்து

videodeepam