deepamnews
இலங்கை

வாகன விபத்துக்களில் இரு சிறுமிகள் மரணம்.

நாட்டில் நேற்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு சிறுமிகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பிரதேசத்தில் கார் ஒன்றும் ஓட்டோ ஒன்றும் மோதியதில் ஓட்டோவில் பயணித்த 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் தாயாரும், ஓட்டோ சாரதியும் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அதேவேளை, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி, தனது தாய் மற்றும் சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

தமக்கு உழைத்து தரவேண்டிய பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு .

videodeepam

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச

videodeepam

அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்

videodeepam