deepamnews
இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தாமதமடைந்த நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ளது.

திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பு, 11 மணியளவில் ஆரம்பமானதாக தெரியவந்துள்ளது .

கட்சியின் ஆதரவாளர்களுக்கும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாதபிரதிவாதங்கள் காரணமாக வாக்கெடுப்பு தாமதமாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் 330 க்கும் மேற்பட்ட பொது சபை உறுப்பினர்கள் மாத்திரம் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கட்சியின் ஆதரவாளர்களுக்கும் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
அதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையால், தேர்தல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

Related posts

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து  மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது  – பொலிஸ் தகவல்

videodeepam

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தோற்கடிக்கப்படும் – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

தேர்தல் குறித்த முக்கிய தீர்மானத்தினை எடுப்பதற்காக கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam