deepamnews
இலங்கை

திருமலையில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு .

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப் பகுதியில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வயோதிபர் செம்பி மொட்டையில் அரசுக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் நேற்று மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு இலக்காகிச் சாவடைந்துள்ளார்.

ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப் (வயது 68) என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 வீதமானோர் வறுமையில்

videodeepam

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு.

videodeepam

கப்பல்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

videodeepam