deepamnews
இலங்கை

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது முக்கியம்

அனைத்து இலங்கையர்களுக்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதும், தமிழ் மக்களின் கௌரவம் அமைதி மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றிற்கான நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில், இலங்கை குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் இந்தியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்திர மணி பாண்டே இதனை தெரிவித்துள்ளார்

“அயல்நாடு என்ற அடிப்படையில் 2009ம் ஆண்டிற்கு பின்னர் இலங்கையின் புனர்வாழ்வு மீள்குடியேற்றம் நிவாரணம் மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகளிற்கு இந்தியா பெருமளவு உதவியை வழங்கியுள்ளது.

இலங்கை மக்கள் சமீபத்தைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக, ஜனவரிக்கு பின்னர் இந்தியா முன்னர் ஒருபோதும் இல்லாத உதவியை வழங்கியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தும் விடயத்தில் இந்தியா எப்போதும் தமிழ்மக்களின் சமத்துவம் , நீதி,  கௌரவம், அமைதி, ஐக்கியம் ஆகிய அபிலாசைகளிற்கு ஆதரவளித்தல், இலங்கையின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு  ஆதரவளித்தல் என்ற இரு அடிப்படை கொள்கைகளால் வழிநடத்தப்பட்டுள்ளது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துதல் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மாகாணசபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல் குறித்த இலங்கை அரசாங்கத்தின் உறுதிமொழிகளை நாங்கள் கருத்தில் எடுத்துள்ளோம்.

இது தொடர்பான முன்னேற்றம் போதுமானதல்ல என நாங்கள் கருதுகிறோம்.

இதனடிப்படையில் இந்த உறுதிமொழிகளை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து, அர்த்தபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அனைத்து இலங்கையர்களுக்கும் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதும், இலங்கையில் தமிழ் மக்களின் கௌரவம் அமைதி மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றுக்கான நியாபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

இலங்கையில் தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது, அனைத்து இலங்கையர்களுக்குமான பொருளாதார செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்தியா இலங்கை மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்த எஞ்சிய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை  – பிரதமர் தினேஷ் குணவர்தன

videodeepam

யாழில் 21வயது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

videodeepam

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு.

videodeepam