deepamnews
இலங்கை

22 ஆவது திருத்தத்தினால் பயனில்லை. – சுமந்திரன் தெரிவிப்பு

22வது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதாக மக்களிடம் கூறப்பட்ட போதிலும், அது எதையும் சாதிக்கவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரங்களையும் ஜனாதிபதி தொடர்ந்து வைத்திருப்பார் என்ற நிலைக்கு, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி மக்களை ஏமாற்றுவதில் அர்த்தமில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாததால், நேரத்தை வீணடிக்காதீர்கள்.

அவர்கள் ஒப்புக்கொண்ட புதிய அரசியலமைப்பை அவர்கள் கொண்டு வர வேண்டும். ” என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தாலி செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுவிட்டு தண்ணி காட்டியவர் கைது!

videodeepam

வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

videodeepam

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை குறைப்பு

videodeepam