deepamnews
இலங்கை

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளுக்கான கட்டணம் 1,150 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வதிவிட வருகை விசா வேலைத்திட்டத்தின் கீழ் விசா வழங்கல் 200 அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது.

இதுதவிர, மேலும் சில பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – சரத்பொன்சேகா குற்றச்சாட்டு

videodeepam

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி நிறுத்தம்

videodeepam

வடக்கு சுகாதாரத்துறை திருப்திகரமாக இல்லை – ஈபிடிபி ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றச்சாட்டு.

videodeepam