deepamnews
இலங்கை

இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாட்டில் இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

3,740 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்லொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் சமையல் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரிக்கும் என்பதால், தேவைக்கு ஏற்ப போதுமான அளவு எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பால் – தயிர் – இறைச்சி ஆகியவற்றின் விலைகள் இரட்டிப்பாகின்றன?

videodeepam

இன்று இலங்கையை தாக்கும் சூறாவளி – மக்களுக்கு எச்சரிக்கை..!

videodeepam

இலங்கையர் என சந்தேகிக்கப்படும் பெண்கள் இஸ்ரேலில் கைது.

videodeepam