நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் நாட்டை எவ்வாறு அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என்பதை உலகிற்கு காண்பித்தவர் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
ஜெசிந்தா ஆர்டெனின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பச்சாதாபம் மற்றும் நுண்ணறிவு ஆகியன சக்திவாய்ந்த குணங்கள் என ஜெசிந்தா ஆர்டென் நிரூபித்துள்ளார் என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
பச்சாதாபமும் தொலைநோக்கும் ஒரு தலைமைத்துவத்தின் சிறப்பு அம்சங்கள் என அவர் நிருபித்துள்ளார் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர் மிகதீவிரமாக நியுசிலாந்திற்காக குரல்கொடுத்தவர் எனகுறிப்பிட்டுள்ள அன்டனி அல்பெனிஸ் எனக்கும் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.