deepamnews
இந்தியா

தமிழ்நாட்டில் இணையத்தள சூதாட்ட தடை சட்டம் அமுல் –  ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்

தமிழ்நாட்டில் இணையத்தள சூதாட்ட தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக துறைசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையளத்தள உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை இழந்து பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இணையத்தள சூதாட்ட தடை சட்டமூலம் கடந்த மாதம் 23ஆம் திகதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கமைய, இணையத்தள சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையத்தள விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5 ஆயிரம் இந்திய ரூபா அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 இலட்சம் இந்திய ரூபா அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதானி குறித்து பேசும் போது மோடியின் கைகள் நடுங்குகின்றன – ராகுல் காந்தி தெரிவிப்பு

videodeepam

இந்தியாவிற்குள் கடல்வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு – இந்திய நிதியமைச்சர் கவலை

videodeepam

சிற்றூந்தில் தொங்கியப்படி சென்ற இந்திய பிரதமர் மோடி- காவல்துறையில் முறைப்பாடு  

videodeepam