deepamnews
இலங்கை

பிரித்தானிய உள்ளுராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழர் அபார வெற்றி

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.

இவர் தனது வெற்றி குறித்து தெரிவிக்கையில், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிராந்திய தேர்தல்கள் அலுவலகம் திறப்பு!

videodeepam

மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவியேற்ற வேலணை பாடசாலை அதிபர்!

videodeepam

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இ.தொ.கா.விற்கும் இடையில் கலந்துரையாடல்!

videodeepam