deepamnews
இலங்கை

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஊடகங்களைத் தொட அனுமதி வழங்க கூடாது – அனுர

ஊடகங்களை நசுக்கும் வகையில் அரசாங்கம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நாட்டு மக்களின் தகவல்களை அறியும் உரிமையை அழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது அந்த நிறுவனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்

அந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நாட்டில் தேர்தல்களை பிற்போடுவதன் மூலம் ஊடகங்களை அடக்கி ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்” அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களில் மாற்றம் – வர்த்தமானி வெளியீடு

videodeepam

நாளை (23) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

videodeepam

வடக்கில் நேற்று அடுத்தடுத்து விபத்துகள் – 2 பேர் பலி, 50 பேர் வரை காயம்

videodeepam