deepamnews
இந்தியா

தொடருந்தில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு -4 பேர் உயிரிழப்பு!

மும்பை – ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து நேற்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் தொடருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது.

மராட்டியத்தின் – பஹல்கர் மாவட்ட தொடருந்து நிலையம் அருகே தொடருந்து வந்தது.

அதன்போது, தொடருந்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தொடருந்து பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்.) வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர் மற்றும் பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

ஓடும் தொடருந்தில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பதற்றமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆர்.பி.எப். வீரர், 3 பயணிகள் என மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எப். வீரர் டஹிசர் தொடருந்து நிலையம் அருகே தொடருந்து வந்தபோது அதில் இருந்து கீழே குதித்து தப்பியோடினார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தொடருந்து பாதுகாப்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் தப்பியோடிய வீரரை தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்தனர்.

அந்த வீரரின் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்தும் வீரரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓடும் தொடருந்தில் பயணிகள் மீது ஆர்.பி.எப் வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை காங்கிராஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் தெரிவிப்பி

videodeepam

யோகா நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

videodeepam

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

videodeepam