deepamnews
இலங்கை

தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (07) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு தெரிவித்து கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு, குறித்த அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமுறையற்ற போராட்டம் நடைபெற்றமை சம்பந்தமாக என தெரிவித்தே குறித்த அழைப்பாணை அனுப்பபட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின் வெட்டு – அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

videodeepam

கோட்டாபயவின் பாதையில் செல்லும் தற்போதைய அரசாங்கம் –  சம்பிக்க குற்றச்சாட்டு

videodeepam

பல்லவராஜன் கட்டு கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு. கவனயீர்ப்பு போராட்டம் .

videodeepam