deepamnews
இலங்கை

அடுத்த பத்து வருடங்களுக்கு ரணிலே ஜனாதிபதி – நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு.

அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாஸவுக்கு அதிகமானோர் ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களித்திருந்தனர். எனினும், அவரால் ஜனாதிபதியாக வர முடியவில்லை.

பிரதமர் பதவியைக் கூடப் பெறுவதற்கு அவர் தயக்கம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றில் ஒருவர் மாத்திரமே இருந்தார். அவரால் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிந்துள்ளது.

எனவே, அடுத்த 10 வருடங்களுக்கு நாட்டின் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணக் கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்.

videodeepam

இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்.

videodeepam

யாழில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

videodeepam