deepamnews
இலங்கை

யாழ்ப்பாண ஆலயத்தில் நடைபெற்ற வரலட்சுமி விரத உற்சவம்.

வேண்டுவோர்களுக்கு வரங்களை அள்ளி அருளும் மகாலட்சுமியின் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் இவ்விரத உற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க  வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.

வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கு அபிஷேக ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் வரலட்சுமிவிரத நூல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த உற்சவத்தை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் உற்சவத்தினை நடாத்திவைத்தனர்.

இதில் பலபாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

சர்வதேச அபிவிருத்தி பங்காளர்களுடன் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்.

videodeepam

பனம் தோட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் குழு நியமனம்!

videodeepam

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 932 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியாகின்றன – சுற்றாடல் அமைச்சு

videodeepam