வேண்டுவோர்களுக்கு வரங்களை அள்ளி அருளும் மகாலட்சுமியின் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/VideoCapture_20230825-114534-1024x762.jpg)
இந்நிலையில் இவ்விரத உற்சவம் வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாலட்சுமிக்கு அபிஷேக ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் வரலட்சுமிவிரத நூல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/VideoCapture_20230825-114612-1024x762.jpg)
இந்த உற்சவத்தை ஆலய பிரதம குரு செ.ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் உற்சவத்தினை நடாத்திவைத்தனர்.
இதில் பலபாகங்களிலும் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.