deepamnews
இலங்கை

நல்லை கந்தனின் திருமஞ்சத்தை காண திரண்டு வந்த பக்தர்கள்!

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார்.

இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாழ்ப்பாணம் ,வெளி மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தந்து கூடியிருந்தனர்.

Related posts

பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிப்பு

videodeepam

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

videodeepam

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது! – டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

videodeepam