deepamnews
இலங்கை

புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் முடிவு

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ கடந்த 23 ஆம் திகதி புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த சட்டமூலம் நாட்டை இராணுவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும், அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும்  தீர்ப்பளிக்குமாறு கோரி, சட்டத்தரணி அமில எகொடமஹவத்த உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.எம்.மரிக்கார் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுக்கள், நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர், புனர்வாழ்வுப் பணியக சட்டமூலத்தில் சில திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.

Related posts

பிணையில் விடுவிக்கப் பட்டவர்களுக்கு அவர்கள் முன்பு செய்த வேலையை வழங்குக – பிரதேச சபை உறுப்பினர் ஜெகதாஸ் பிரேரணை

videodeepam

2022 இலங்கை வரலாற்றில் கடினமான ஆண்டு – இலங்கை மத்திய வங்கி அறிக்கை

videodeepam

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

videodeepam