புதிதாக மதிலொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே, மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வேரலுகஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.