deepamnews
இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஆரம்பம்.

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2024 மற்றும் 2025 ஆம் வருடங்களுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுகளைப் புதுப்பிக்கும் நடவடிக்கையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த தினத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

Related posts

முத்து விநாயகர் ஆலய ரத உற்சவ பெருவிழா.

videodeepam

சிற்றுண்டிச்சாலைகளில் அரிசி மா உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

videodeepam

மழை காரணமாக நீரில் மிதக்கின்றது அம்பாறை மாவட்டம்

videodeepam