deepamnews
இலங்கை

இரு வேறு குற்ற செயல்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது.

தர்மபுரம் பொலிசாருக்கு இன்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக புது குடியிருப்பு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலியாற்றுபகுதியில் வீதிச்சோதனையின் மூலம் கப்ரக வாகனம் மற்றும் வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்றைய தினமே நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும்பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.

Related posts

வெடுக்குநாறி மலையில் சிலை வைக்க மீண்டும் தடை

videodeepam

புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில்  இன்று சுதந்திர தினம் கொண்டாட்டம்.

videodeepam

சுற்றுலாத்துறையை மேம்படுத்த ரஜினிகாந்தின் உதவியை நாடும் இலங்கை

videodeepam