deepamnews
இலங்கை

வீதி விபத்தில் போலீஸ் உத்தியோகத்தர் மற்றும் முதியவர் பலி!

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று (18)இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாப மரணமடைந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒருவருடம் கடந்த நிலையில் தற்பொழுது ஒரு மாதம் நிறம்பிய கைக்குழந்தையும் உள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த விபத்தானது இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிய வருகிறது

விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார்

மேலும் முதியவர் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

விபத்தில் மரணமடைந்தவர் 27 வயதான அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா என்பவர் என்று தெரிய வருகிறது

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

இரண்டு பிள்ளைகளின் தந்தை வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை!

videodeepam

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன் சூட்சமம்

videodeepam

சீனா இலங்கையின் நண்பன் ஆனால் இந்திய நலன்களுக்கு எதிராக சீனா செயற்பட இலங்கை அனுமதிக்காது என்கிறார் அலி சப்ரி

videodeepam