deepamnews
இலங்கை

இலங்கையர் கடத்தல் விவகாரம்  – சீனப் பிரஜை உட்பட மூவர் நேற்று கைது!

இலங்கையில் இருந்து 56 பேரை மியன்மாருக்குக் கடத்திய குழுவின் முக்கிய சூத்திரதாரியாக இருந்த சீனப் பிரஜை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டனர் என்று சந்தேகத்தேகிக்கப்படும் 56 பேர் உள்ளிட்ட  300 வரையானோரை ஒரு குழு சித்திரவதை புரிவதோடு அங்கிருந்த நான்கு இலங்கையர் தப்பி வந்ததான செய்தி வெளிவந்த நிலையில், அவர்களை இலங்கையில் இருந்து கடத்தியதாக நேற்று பொலிஸாரால் கொழும்பில் வைத்து  மூவர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் சீனப் பிரஜை ஒருவரும் அடங்குகின்றார் என்று பொலிஸார் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

videodeepam

அதிகார பகிர்வு தொடர்பில் ரணில் குட்டிக்கரணம் அடித்து விட்டார் – எம்.ஏ. சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam

எதிர்வரும் காலங்களில் மின்துண்டிப்பு நேரம் நீடிக்கும் சாத்தியம் 

videodeepam