deepamnews
இலங்கை

மூன்று பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தயார்.

தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி – கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ  களமிறங்குவார் என்றும், இதுவே கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்குவதற்கு அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு முடிவெடுத்துள்ளது.

அத்துடன், தமது கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க எனவும், அவர் பொது வேட்பாளராக களமிறங்குவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

பிரதான அரச பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தல் குறித்து இறுதியான – உறுதியான முடிவை இன்னும் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்கில் செயற்படும் தமிழ்த் தேசியக் கட்கிகளும் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கவில்லை.

அதேவேளை, நவநசமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி உட்பட சில சிறு கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளன.

Related posts

தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு

videodeepam

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

videodeepam

முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தை கொலை! மதபோதகர் உட்பட மூவர் கைது.

videodeepam