பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டி, கல்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார்.
நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் நண்பர்கள் குழுவுடன் குளித்துக் கொண்டிருந்த மேற்படி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த பசிந்து சாமோத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் ரயிலில் கல்பொடைக்கு வந்து கல்பொட நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்றபோது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள்ளார்.
அவர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.