deepamnews
இலங்கை

இன்றைய வானிலையில் ஏற்படபோகும் மாற்றம்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14.02.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யுக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு செல்லமாட்டோம் என வியட்நாமிலுள்ள இலங்கை அகதிகள் தெரிவிப்பு – இருவர் தற்கொலைக்கு முயற்சி

videodeepam

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதாக அமெரிக்கா உறுதி –  அன்டனி பிளிங்கனை சந்தித்தார்  அலி சப்ரி

videodeepam

திரிபோஷாவில் விசத்தன்மை – 2 நிறுவனங்கள் அறிக்கை

videodeepam