deepamnews
இலங்கை

கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

நேற்றய தினம் யாழ்ப்பாண வணிகக் கழகத்திற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வணிக கழகத்தில் இடம் பெற்றது. இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம் அனைத்து கடைகளையும் பூட்டி பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்தது.

சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

ஆசிரியர் நியமனத்தில் அராலி வள்ளியம்மையை ஓரங்கட்டியுள்ளதா வடக்கு கல்வி அமைச்சு? – பெற்றோர் கேள்வி.

videodeepam

பொலிஸார் செயற்படவில்லை  என்றால் யாரிடம் கேட்பது –  சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி.

videodeepam