deepamnews
இலங்கை

இ.போ.ச சபையின் வடபிராந்தியசாலை ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்திய சாலை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Related posts

தேர்தல் நடைபெறுமா? இறுதி தீர்மானத்திற்காக நாளை கூடுகிறது  தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு பயணத்தடை.

videodeepam

தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்றுவது முக்கியம்

videodeepam