deepamnews
இலங்கை

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை இந்தியா செல்கிறார் – பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்பு

வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை 02 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் மாநாடடில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

இந்த மாநாட்டை தவிர, மார்ச் 03 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 04 ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்தியாவில் தங்கவுள்ளார்.

Related posts

4 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை.

videodeepam

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் – இன்று முக்கிய தீர்மானங்கள்

videodeepam

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

videodeepam